Sudasuda Thooral
2
views
Lyrics
சுடச்சுட தூரல் பொழிவது நீ தான் தொடத் தொடத் தீயாய் குளிர்வதும் நீ தான் எதிர்பாராத பூகம்பம் நீயே தான் ஓ... ஓ ஓ என்னை நான் காணும் ஆரம்பம் நீயே தான் ♪ முன்னிருப்பதும் நீ தான், பின்னிருப்பதும் நீ தான், என்ன சொல்வது, எந்தன் நெஞ்சிலே உள்ளிருப்பதும் நீ தான் சிக்கவைப்பதும் நீ தான், சிக்கெடுப்பதும் நீ தான் என்ன செய்வது என்னை இப்படி வத்த வைப்பதும் நீ தான் நீ தான் ♪ என்னிடமுள்ள கெட்டதை நீ விலக்கி நல்லதையே கொடுத்தாய் தேவதையே நானே என்னை துரந்தேனடி நீயே உண்மை உணர்ந்தேனடி என்ன நினைத்தாலும் சொல்லி விடுவேன் இப்பொழுது ஏனடி தயங்குகிறேன் சொல்லொல்லாம் நீயாகி போனாய்யடி அன்னையிடம் கூட இப்படி ஒர் பாசம் கண்டதில்லை நானென புரிகிறதே வாழ்வெல்லாம் நீ என்று ஆனயேடி ♪ எப்பவும் உன்னை எண்ணியே கண்னுறங்கி எத்தனையே தினங்கள் ஆகியதே பூவே முன்பும் இருந்தேனடி ஆனால் இன்றே வாழ்ந்தேனடி உன்னை ஒரு பாதி என்று நினைக்காமல் அத்தனையும் நீ என்று நினைப்பதிலே நாளெல்லாம் தீர்ந்தாலே சந்தோஷம் தொல்லை என நீயும் என்னை நினைத்தாலே உன்நிம்மதியை நீ பெற துணை புரிந்து சாவை நான் சேர்ந்தாலும் சந்தோஷம் சுடச்சுட தூரல் பொழிவது நீ தான் தொடத் தொடத் தீயாய் குளிர்வதும் நீ தான் எதிர்பாராத பூகம்பம் நீயே தான் ஓ... ஓ ஓ என்னை நான் காணும் ஆரம்பம் நீயே தான்
Audio Features
Song Details
- Duration
- 05:06
- Key
- 3
- Tempo
- 120 BPM