En Nenjil
11
views
Lyrics
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் பேர் என்னவென கேட்டேன் என் கண்ணில் ஒரு தீ வந்தது அதன் பேர் என்ன என்னவென கேட்டேன் என்ன அது இமைகள் கேட்டது என்ன அது இதயம் கேட்டது காதல் என உயிரும் சொன்னதன்பே காதல் என உயிரும் சொன்னதன்பே என் பெயரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த பேர் என்னவென கேட்டேன் என் தீவில் ஒரு கால வந்தது அந்த ஆள் எங்கு என கேட்டேன் கண்டுபிடி உள்ளம் சொன்னது உன்னிடத்தில் உருகி நின்றது காதல் இது உயிரும் சொன்னது அன்பே காதல் இது உயிரும் சொன்னது அன்பே ♪ சில நேரத்தில் நம் பார்வைகள் தவறாகவே எடை போடுமே மழை நேரத்தில் விழி ஓரத்தில் இருளாகவே ஒளி தோன்றுமே எதையும் எடை போடவே இதயம் தடையாய் இல்லை புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம் என்னை நீ மாற்றினாய் எங்கும் நிறம் பூட்டினாய் என் மனம் இல்லையே என்னிடம் என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் பேர் என்னவென கேட்டேன் என் கண்ணில் ஒரு தீ வந்தது அதன் பேர் என்ன என்னவென கேட்டேன் ♪ உன்னை பார்த்ததும் அந்நாளிலே காதல் நெஞ்சில் வரவே இல்லை எதிர்காற்றிலே குடை போலவே சாய்ந்தேன் இன்று எழவே இல்லை இரவில் உறக்கம் இல்லை பகலில் வெளிச்சம் இல்லை காதலில் கரைவதும் ஒரு சுகம் எதற்கு பார்த்தேன் என்று இன்று புரிந்தேனடா என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும் என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் பேர் என்னவென கேட்டேன் என்கண்ணில் ஒரு தீ வந்தது அதன் பேர் என்ன என்னவென கேட்டேன் என்ன அது இமைகள் கேட்டது என்ன அது இதயம் கேட்டது காதல் என உயிரும் சொன்னது அன்பே காதல் என உயிரும் சொன்னது அன்பே ♪ காதல் இது உயிரும் சொன்னது அன்பே காதல் இது உயிரும் சொன்னது அன்பே
Audio Features
Song Details
- Duration
- 05:05
- Key
- 8
- Tempo
- 145 BPM