Unnai Allai

Lyrics

உனைக்காணவே உயிர் ஏங்குதே
 நிழல் பூவிலே நிஜம் தேடுதே
 தனிதீவிலே மனம் வாடுதே
 காதலிலே தேய்பிறையும் தோன்றியதே
 மெய்தாகமே உயிர் பாவயாய்
 தொலைதூரமாய் துணை பூத்ததே
 எனக்காவே விதி சேர்த்ததே
 ஞாபகமோ தாகமதில் காய்கிறதே
 விதவிதமாய் சுகங்களிலே மிதந்தோம்
 இதம் இதமாய் இதயத்திலே இணைந்தோம்
 காலைப்பூவைப் போல வாசம் வீசினோம்
 பேசிப்பேசி காதல்தான் ஊற
 மீண்டும் சாரல் போல சேர வேண்டுமே
 உனைக்காணவே உயிர் ஏங்குதே
 நிழல் பூவிலே நிஜம் தேடுதே
 தனிதீவிலே மனம் வாடுதே
 காதலது தேய்பிறையாய் தேய்கிறதே
 மனம் தானாய் நோக
 தினம் வாழ்வே வீணாக
 விடை ஏதும் பாராமல்
 விதி காட்டுதே போராக
 விழி பாவை விரல் கோர்க்க
 விரைந்தோடிப் போராட
 வழித்தேட புதுப்பாதை இசை காட்டுதே
 உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
 நிழல் பூவிலே நிஜம் பார்க்கிறேன்
 இனிதாகவே இதம் தோன்றுதே
 காதலிங்கு முழு நிலவாய் மாறியதே
 மெழுகாகவே உயிர் பாதையே
 கொடும் தூரத்தில் துணையானதே
 எனக்காகவே விதி சேர்த்ததே
 ஓவியமாய் காதலது மாறியதே

Audio Features

Song Details

Duration
12:41
Key
1
Tempo
165 BPM

Share

More Songs by Sathyaprakash

Albums by Sathyaprakash

Similar Songs