Mudhal Murai

Lyrics

முதல் முறை பார்த்த ஞாபகம்
 உயிரினில் தந்து போகிறாய்
 இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
 மழை வரும் மாலை நேரத்தில்
 மனதினில் வந்து போகிறாய்
 விழியினில் ஏனோ ஒரு ஈரம்
 சில நேரம் மாயம் செய்தாய்
 சில நேரம் காயம் செய்தாய்
 மடி மீது தூங்க வைத்தாய்
 மறு நாளில் ஏங்க வைத்தாய்
 வெயிலா மழையா வலியா சுகமா எது நீ
 நீதானே என் பொன்வசந்தம்
 நீதானே என் பொன்வசந்தம் ...வசந்தம் ...வசந்தம்
 முதல் முறை பார்த்த ஞாபகம்
 உயிரினில் தந்து போகிறாய்
 இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
 மழை வரும் மாலை நேரத்தில்
 மனதினில் வந்து போகிறாய்
 விழியினில் ஏனோ ஒரு ஈரம்
 நீந்தி வரும் நிலாவினிலே
 ஓர் ஆயிரம் ஞாபகங்கள்
 நீண்டநெடும் கனாவினிலே
 நூறாயிரம் தீ அலைகள்
 நெஞ்சமேனும் வினாக்களுக்குள்
 என் பதில் என்ன பல வரிகள்
 சேரும் இடம் விலாசத்திலே உன் பார்வையின் முகவரிகள்
 ஊடலில் போனது காலங்கள்
 இனி தேடிட நேரங்கள் இல்லையே
 தேடலில் நீ வரும் ஓசைகள்
 அங்கு போனது உன் தடம் இல்லையே
 காதல் என்றால் வெறும் காயங்களா
 அது காதலுக்கு அடையாளங்களா
 வெயிலா மழையா வலியா சுகமா எது நீ...
 நீதானே என் பொன்வசந்தம்
 நீதானே என் பொன்வசந்தம் ...வசந்தம் ...வசந்தம்
 முதல் முறை பார்த்த ஞாபகம்
 உயிரினில் தந்து போகிறாய்
 இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
 மழை வரும் மாலை நேரத்தில்
 மனதினில் வந்து போகிறாய்
 விழியினில் ஏனோ ஒரு ஈரம்
 சில நேரம் மாயம் செய்தாய்
 சில நேரம் காயம் செய்தாய்
 மடி மீது தூங்க வைத்தாய்
 மறு நாளில் ஏங்க வைத்தாய்
 வெயிலா மழையா வலியா சுகமா எது நீ
 நீதானே என் பொன்வசந்தம்
 நீதானே என் பொன்வசந்தம்
 

Audio Features

Song Details

Duration
03:55
Key
11
Tempo
92 BPM

Share

More Songs by Ilaiyaraaja

Albums by Ilaiyaraaja

Similar Songs